Site icon Nangooram

காவல்துறையினருக்கு பணி ஓய்வு!மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் பாராட்டு!

பணி ஓய்வில் செல்ல இருக்கும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை பாராட்டி வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

காவல் பணியில் தங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் எதிர்கால காவல் அதிகாரிகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என பாராட்டு.

காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் ஒரு உதவி ஆய்வாளர், 7 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 2 அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அதன்படி பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்துள்ளார்.

.

Customize Text: Font Color:
Exit mobile version