கஞ்சா பறிமுதல், இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வசந்தம் நகர், கோட்டார் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது30), மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததற்காக இருவரும் வழக்குப் பதிவு செய்து தக்கலை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Customize Text:
Font Color:

