தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக் கணக்கானோர் முற்றுகையிடடதால பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தங்கள் வாழ்வாதாரம் பாதித்ததாகவும் வேலைவாய்ப்பை இழந்ததாகவும் கூறி, ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழுவினர், பண்டாரம்பட்டி தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராம மக்கள், திரேஸ்புரம் மீனவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் முற்றுகையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.இந்த முற்றுகையில் உள்ள முக்கிய பிரதிநிதிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.