தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழி திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நிறைந்த நடிகை, பத்மபூஷண் விருதாளர் மூத்த நடிகை சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலை பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று தனது இல்லத்தில் இயற்கை எய்தினார். சரோஜா தேவி திரையுலகில் 1950-களில் கால் பதித்து, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ஆர், ராஜ்குமார், திலிப் குமார் உள்ளிட்ட லெஜண்ட் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.
100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சரோஜா தேவி, தனது அழகு, நடிப்பு திறமை, அழுத்தமான உரையாடல் மற்றும் கலைமாமணி முத்திரையால் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத இடத்தை பிடித்தார்.
இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நடிகர் சத்யராஜ், நடிகை லட்சுமி, இயக்குநர் பாரதிராஜா, மற்றும் பலர் சமூக வலைதளங்களில் அவரது மறைவு திரையுலகுக்கு ஓர் பெரிய இழப்பு எனக் கூறியுள்ளனர்.
அவரது உடல், பெங்களூருவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.